காகித நகர் சிறுவர் பூங்காவிற்கு முன்னாள் அமைச்சர் மர்ஹும் முஹைதீன் அப்துல் காதரின் பெயர்

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ள காகித நகர் கிராமத்தில் காகிதநகர் சிறுவர் பூங்காவிற்கு முன்னாள் அமைச்சர் மர்ஹும் முஹைதீன் அப்துல் காதரின்  பெயர் கடந்த காலத்தில் சூட்டப்பட்ட போதிலும்; அதற்கான பெயர் பலகை அமைக்கப்படவில்லை.

இது தொடர்பாக பிரதேச சபையின்  உறுப்பினர்களான எம்.பி.ஜௌபர், எம்.பி.ஜெஸீமா ஆகியோர் தவிசாளரின் கவனத்திற்கு கொண்டுவந்ததற்கமைய பெயர் பலகை நேற்று (25.06.2022) அமைக்கப்பட்டது.

மேலும் காகிதநகர் வட்டார  உறுப்பினர்களுடைய வேண்டுகோளுக்கிணங்க குறித்த பூங்காவிற்கான மின் இணைப்பு, குடிநீர் வசதி, மேலதிக விளையாட்டு வசதி, சுற்று வேலி திருத்தம், காவலாளி நியமனம் மற்றும் நிழல் மரக்கன்று நடுகை போன்ற நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக  தவிசாளர் ஏ.எம்.நௌபர்  தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.