பிரபல நடிகர் வீட்டு வாசலில் தூக்கிட்டு தற்கொலை! வெளியான காரணம்


பிரபல நடிகர் பிரசாத் தனது வீட்டு வாசலில் உள்ள மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மலையாள நடிகரான என்.டி பிரசாத் நிவின் பாலி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்துள்ளார்.
43 வயதான அவர் தனது வீட்டு வாசலில் உள்ள மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பிரசாத்துக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
மன உளைச்சல் மற்றும் குடும்ப பிரச்சனை அவரது தற்கொலைக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று பொலிசார் கூறுகின்றனர்.

கடந்த காலங்களில் போதைப் பொருளுடன் பிடிபட்டது உட்பட பல வழக்குகளில் நடிகர் பிரசாத் குற்றம் சாட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படிபிரசாத் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல நடிகர் வீட்டு வாசலில் தூக்கிட்டு தற்கொலை! வெளியான காரணம்

Facebook



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.