மாரடைப்பால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் பூ ராமு உயிரிழப்பு.. சோகத்தில் திரைதுறையினர்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் பூ ராம் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூதிரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ராமு. கிராமத்து மனிதராக இவர் அந்த படத்தில் நடித்திருந்தது ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றது. அதனை தொடர்ந்து நீர்ப்பறவை, நெடுநல்வாடை , பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு அவர் சென்னை ராஜீவ்காந்தி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.