உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான வீடு இடிப்பு..!

காஞ்சிபுரத்தில் மாநகராட்சி மற்றும் தொல்லியல் துறையிடம் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான வீடு இடிக்கப்பட்டது.

வைகுண்ட பெருமாள் கோவில் தெருவில் வசித்து வரும் அருள்ஜோதி என்பவர் தனது நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக பக்கத்து வீட்டுக்காரர் வழக்கு தொடர்ந்தார்.

விசாரணையில், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த இடத்தில் அத்துறையிடமும், மாநகராட்சியிடமும் அனுமதி பெறாமல் 2 மாடி வீடு கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து முழு வீட்டையும் இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.