கொடூர கொலை சம்பவத்தால் ராஜஸ்தானில் பதற்றம்… 144 தடை உத்தரவு.!

நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாகப் பதிவைப் பகிர்ந்ததால், உதய்பூரில் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டார்; பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வீடியோவை தாக்குபவர்கள் வெளியிட்டுள்ளனர்

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரின் மால்தாஸ் தெரு பகுதியில் இன்று கன்னையா என்ற நபர் இருவரால் தலை துண்டித்து கொலைசெய்யப்பட்டார். அவர் சில நாட்களுக்கு முன்பு நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக ஒரு சமூக ஊடக பதிவு ஒன்றையும் பகிந்துள்ளார். 

கொலையாளிகள் இருவரும் தலை துண்டிக்கப்பட்டதை பெருமைப்படுத்தும் வீடியோவை ஒன்றை வெளியிட்டு, பிரதமர் மோடியின் உயிருக்கும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ராஜஸ்தான் முதல்வர் தெரிவிக்கையில், “உதய்பூரில் ஒரு நபரைக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ராஜ்சமந்தில் இருந்து கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் வழக்கு அதிகாரி திட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும், விரைவான விசாரணையை உறுதி செய்வதன் மூலம் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, இன்று உதய்பூரில் உள்ள தன் மண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு, உதய்பூர் மாவட்டத்தின் தன்மண்டி, காந்தகர், ஹதிபோல், அம்பமாதா, சூரஜ்போல், பூபால்புரா மற்றும் சவினா PS பகுதிகளில் 144 பிரிவு மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொலை செய்தவர்கள் புகைப்படம் 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.