சரக்குவேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் காயம்.!

சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் பிரானூர் பாடர் பகுதியை சேர்ந்தவர் சரக்கு வேன் டிரைவர் விக்னேஷ்.

இவர் நேற்று மேலூர் கதிரவன் காலனியை சேர்ந்த விறகு வெட்டும் 6 தொழிலாளர்களுடன் மதுரை மாவட்டம் காண்டை கிராமத்திற்கு சரக்கு வேனில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எம். சப்புலாபுரம் பகுதியில் உள்ள பாலத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஓட்டுனர் மற்றும் சரக்கு வேனில் இருந்த ஆறு ஆறு தொழிலாளர்களும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.