சோனியா காந்தியின் தனி செயலாளர் மீது பலாத்கார வழக்கு பதிவு

புதுடெல்லி: சோனியா காந்தியின் தனிச் செயலாளர் பி.பி.மாதவன்(71) மீது 26 வயது இளம்பெண்கள் டெல்லி உத்தம்நகர் போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி தந்து மாதவன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மிரட்டியதாகவும் அவர் கூறி உள்ளார். டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் பணிபுரிந்த பெண்ணின் கணவர் கடந்த 2020ம் ஆண்டு இறந்துவிட்டார். இந்த புகார் தொடர்பாக போலீசார், மாதவன் மீது பாலியல் பலாத்காரம், மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.