நடந்து சென்ற இளைஞர் அறிவிப்பு பலகை மீது மோதி உயிரிழப்பு..

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மதுபோதையில் நடந்து சென்ற இளைஞர் அறிவிப்பு பலகையில் மோதி உயிரிழந்தார்.

சந்துரு என்ற அந்த இளைஞர் இரவு மது போதையில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது, அறிவிப்பு பலகையில் மோதி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பின் தள்ளாடியபடியே சாலையில் அமர்ந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். அவ்வழியாக வந்த ரோந்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.