பழைய இரும்பு கடை ஊழியர் மீது தாக்குதல் – சிசிடிவி காட்சியால் சிக்கிய திமுக பிரமுகர்

சென்னையில் உள்ள பழைய இரும்பு கடையில் புகுந்து ஊழியர் மற்றும் உரிமையாளரை தாக்கிய திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பரணிபுத்தூரை சேர்ந்த விஜயகுமார் என்பவர் அண்ணாநகரில் பழைய இரும்பு கடையை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 26-ம் தேதி திமுக பிரமுகரான பிரவீன் குமார் என்பவர் வந்து, தனது கலவை இயந்திரத்தை பழைய இரும்புக்கு தெரியாமல் போடப்பட்டதாகக்கூறி அதனை தேடியுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்படவே அதனை தடுக்க வந்த கடை ஊழியரையும் பிரவீன்குமார் தாக்கியுள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி பிரவீன்குமாரை கைது செய்து, நீதிமன்ற பிணையில் விடுவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.