பூமிக்கடியில் இருந்து பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் திருப்பம் – தந்தை, மகன் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் பாக்கம்புதூரில் தலையில் பலத்த காயங்களுடன் பூமிக்கடியில் இருந்து பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சிசிடிவி மற்றும் செல்போன் சிக்னல்களை ஆராய்ந்த 3 தனிப்படை போலீசார், வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்பும் வீராசாமி, அவரது மகன் விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில் உயிரிழந்தது அதே ஊரைச் ஆண்டாள் என்றும், மகளை வெளிநாடு அனுப்ப 15 லட்ச ரூபாய் கடன் வாங்கி விட்டு திருப்பித் தராத ஆத்திரத்தில் பத்து நாட்களுக்கும் மேலாக வீட்டில் வைத்து துன்புறுத்தி அடித்துக் கொலைச் செய்து புதைத்ததாக இருவரும் தெரிவித்ததாக போலீசார் கூறினர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.