பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்.. செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த பரபரப்பு..!

இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 25ம் தேதி செங்கல்பட்டு – காஞ்சிபுரம் பைபாஸ் சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்றுகொன்டிருந்தார்.  அப்போது அங்கு ஆத்தூர் பகுதியை சேர்ந்த சரவணம் என்பவர் நண்பர்களுடன் வந்துள்ளார்.

அவர்கள் அந்த பெண்ணை வலுக்கட்டாயாமாக மது அருந்த வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்  சரவணனை கைது செய்தனர்.

மேலும் ,தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.