யாழில் தனது பணத்தை முதலீடு செய்யவுள்ள தம்மிக்க பெரேரா! கடவுச்சீட்டு தொடர்பில் தகவல்


யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றில் கருத்து வெளியிடும் போது அவர் இநத விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு ஒருநாள் சேவை

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடவுச்சீட்டு ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும். இதற்காக யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும்.

தம்மிக பெரேரா அமைச்சராக பதவிப்பிரமாணம் 

யாழில் தனது பணத்தை முதலீடு செய்யவுள்ள தம்மிக்க பெரேரா! கடவுச்சீட்டு தொடர்பில் தகவல் | Dhammika Perera Telling About Passport

இதன்முதல் கட்டமாக, யாழ்ப்பாணத்தில் உள்ள குடிவரவு, குடியகல்வு அலுவலகத்தில் எனது பிரத்தியேக பணத்தை முதலீடு செய்து ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும்.

நிலைமை மாற்றியமைக்கப்படும்

தற்போது கடவுச் சீட்டைப் பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை மாற்றியமைக்கப்படும்.

நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா சத்திய பிரமாணம் 

யாழில் தனது பணத்தை முதலீடு செய்யவுள்ள தம்மிக்க பெரேரா! கடவுச்சீட்டு தொடர்பில் தகவல் | Dhammika Perera Telling About Passport

இதனைத் தவிர மேலும் ஐந்து இடங்களில் பிராந்திய அலுவகங்களையும், ஒருநாள் சேவையையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.