ரிலையன்ஸ் ஜியோ நிறுவன இயக்குநராக ஆகாஷ் அம்பானி நியமனம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ரிலையன்ஸ் ஜியோ நிறுவன இயக்குநராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி, ‛ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்’ குழுமத் தலைவராக உள்ளார். இவரின் ஜியோ நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், ஜியோ நிறுவன இயக்குநர் பதவியில் இருந்து அவர் நேற்று (ஜூன் 27) ராஜினாமா செய்துள்ளார்.

latest tamil news

நேற்று நடைபெற்ற ஜியோவின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பங்கஜ் மோகன் பவார் ஜூன் 27 முதல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்கவும், முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியை இயக்குநராக நியமிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் ஆகாஷ் அம்பானி ஜியோ நிறுவன இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆகாஷ் அம்பானி நியமனம் குறித்து பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.