விரைவில் 114 போர் விமானங்கள்: விமானப்படை தளபதி நம்பிக்கை| Dinamalar

புதுடில்லி: நம் விமானப் படைக்கு 114 போர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது தொடர்பாக சர்வதேச விமான நிறுவனங்களுடன் ஆரம்பகட்ட பேச்சு துவங்கியுள்ளதாக நம் விமானப் படையின் தலைமை தளபதி வி.ஆர். சவுத்ரி நேற்று தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது: நம் விமானப் படைக்கு 114 போர் விமானங்கள் வாங்க 2019ல் முதல்கட்ட டெண்டர் விடப்பட்டது. மொத்தம் 1.41 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தின்படி சர்வதேச விமானத் தயாரிப்பு நிறுவனங்கள் அந்த விமானம் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். மேலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் அவை தயாரிக்கப்பட வேண்டும்.

இதில் பங்கேற்க பல சர்வதேச விமானத் தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக உள்ளன. விரைவில் இதில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம். இந்த விமானங்கள் மூலம் நம் படையின் பலம் அதிகரிக்கும். இதைத் தவிர 83 தேஜஸ் என்ற இலகு ரக போர் விமானங்கள் சேரும்போது விமானப் படையின் பலம் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.