வெளிநாட்டு பெண்ணை 11 ஆண்டுகளாக காதலித்த தமிழர்! உறுதியாக இருந்த ஜோடி… இறுதியில் சுபம்


தமிழர் ஒருவர் வெளிநாட்டு பெண்ணை 11 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் குடும்பத்தினர் முன்னிலையில் காதலியை கரம் பிடித்துள்ளார்.

தமிழகத்தின் கன்னியாகுமரியை சேர்ந்தவர் எழில் குமார் (33). ஹொட்டல் மேனேஜ்மென்ட் முடித்த இவர் துபாயில் உள்ள ஒரு நட்சத்திர ஹொட்டலில் பணியாற்றி வருகிறார்.
அதே ஹொட்டலில் இந்தோனேசியாவை சேர்ந்த ரினாவதி ராஸ்மன் (31) என்பவரும் பணிபுரிந்தார்.

இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்ததால் அடிக்கடி பேசி பழகி வந்தனர். இது நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 11 வருடங்களாக காதலித்து வந்தனர்.
வருடங்கள் பல கடந்தும் தங்களுடைய காதலில் இருவரும் உறுதியாக இருந்தனர்.

கடல் கடந்த இந்த காதலை இருவருடைய பெற்றோரும் ஏற்றுக் கொண்டனர். பின்னர் திருமணத்துக்கான ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்தது.
அதன்படி கன்னியாக்குமரியில் எழில் – ரினாவதி திருமணம் நேற்று காலை திருமணம் நடைபெற்றது.

வெளிநாட்டு பெண்ணை 11 ஆண்டுகளாக காதலித்த தமிழர்! உறுதியாக இருந்த ஜோடி... இறுதியில் சுபம் | Tamil Youth Married Indonesian Girl Photos

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுமாப்பிள்ளை எழில் கூறுகையில், மீனவ சமுதாயத்தை சேர்ந்த நான் படிப்பை முடித்ததும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு துபாயில் உள்ள ஒரு ஹொட்டலில் மேலாளராக பணியில் சேர்ந்தேன்.

அப்போது அங்கு பணிபுரிந்த இந்தோனேசியாவை சேர்ந்த ரினாவதி ராஸ்மனுவை காதலித்தேன். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம் என கூறினார்.

மணமகள் ரீனாவதி ராஸ்மன் கூறுகையில், எனது தந்தை இறந்து விட்டார். எனக்கு ஒரு அண்ணன், ஒரு அக்காள், ஒரு தங்கை உள்ளனர். தாயார் மினார் மார்பன் பராமரிப்பில் வாழ்ந்து வந்தேன்.

எழில்குமாரின் பழகும்விதம் எனக்கு பிடித்திருந்தது. இதனால் அவரை காதலித்தேன்.
குடும்பத்தினர் எங்கள் காதலை ஏற்று கொண்டதால் தற்போது வாழ்வில் ஒன்றிணைந்தோம் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

வெளிநாட்டு பெண்ணை 11 ஆண்டுகளாக காதலித்த தமிழர்! உறுதியாக இருந்த ஜோடி... இறுதியில் சுபம் | Tamil Youth Married Indonesian Girl Photos



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.