ஆஸ்கர் குழுவில் தென் இந்திய முதல் நடிகர்: ட்ரெண்டிங் ஆன சூர்யா

உலக சினிமாவில் உயரிய விருது ஆஸ்கார். இந்த விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெறுவதே சாதனையாக கருத்தப்படும் அளவுக்கு ஆஸ்கார் உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கார் விருது குழுவில் உறுப்பினர்களாக சேர பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவது வழக்கமான ஒன்று.

அந்த வகையில் நடப்பு ஆண்டு கலை மற்றும் அறிவியல் பிரிவில் இந்தியாவின் சார்பில் நடிகர் சூர்யா அழைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஆஸ்கார் விருது குழுவில் உறுப்பினராக சேர இருக்கும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமை சூர்யாவுக்கு கிடைத்துள்ளது. அதேபோல் பிரபல இந்திய நடிகையாக காஜோலுக்கும் ஆஸ்கார் விருது குழுவில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆஸ்கர் விருது உறுப்பினராக அழைக்கப்பட்ட சூர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், பிரைட் ஆஃப் இந்தியன் சினிமா என்ற ஹேஷ்’டேக்’கை உருவாக்கிய சூர்யா ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு சூர்யா தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

மேலும் சூர்யா, காஜோல் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் சார்பில் இயக்குநர் பிரிவில், பான் நலின், ஆவணப்படங்கள் பிரிவில் சுஷ்மித், கோஷ், மற்றும் ரின்டு தாமஸ், எழுத்தாளர் பிரிவில் ரீமா காக்டி ஆகியோருக்கு ஆஸ்கார் விருது குழு உறுப்பினராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.