செனகலில் படகு கவிழ்ந்து 13 பேர் பரிதாப பலி| Dinamalar

டாக்கர்:மேற்கு ஆப்ரிக்க நாடான செனகலில் இருந்து, ஐரோப்பாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில், 13பேர் இறந்தனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடுகள் பலவற்றில் வறுமையும், வன்முறையும் அதிகரித்துள்ளன. இதனால், அந்நாடுகளில் இருந்த பலர் , ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைய, ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொள்கின்றனர்.இந்நிலையில், செனகலில் இருந்து 150க்கும் அதிகமான அகதிகளை ஏற்றிய படகு, ஐரோப்பா நோக்கி கடலில் சென்றது.

செனகலின் கசாமான்ஸ் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, படகு திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து, படகு கவிழ்ந்தது. தகவல் அறிந்து மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ௯௧ பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 13 பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. ௪௦க்கும் அதிகமான அகதிகளின் நிலை தெரியவில்லை. அவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என, அஞ்சப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.