தலைநகரம் 2 படப்பிடிப்பு நிறைவு

'உள்ளத்தை அள்ளித்தா', அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு போன்ற பல நல்ல படங்களை இயக்கிய சுந்தர்.சி கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான 'தலைநகரம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். சுராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது .

சுந்தர்.சி இப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் வி.இசட்.துரை இயக்கி வருகிறார். இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தலைநகரம் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை கேக் வெட்டி படக்குழு கொண்டாடி உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.