தென்மேற்கு தைவானில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கம்.!

தென்மேற்கு தைவானில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

தரைப்பகுதியில் இருந்து 20 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவானதாக நிலஅதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, காலையில் 2 மணி நேர இடைவெளியில் தென்மேற்கு தைவான் கடற்கரையில் 5 மற்றும் 4.8 ரிக்டர் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நாடு முழுவதும் உணரப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.