புதிய அதிபர் என்.சஹாப்தீனுக்கு மகத்தான வரவேற்பு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக என். சஹாப்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாடசாலையில் நிலவிய அதிபர் வெற்றிடத்திற்கே இவர் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலயத்தில் மிகவும் சிறப்பான முறையில் அதிபராக சேவையாற்றி வந்த என்.சஹாப்தீனுக்கு வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அத்துடன், இந்நிகழ்வின்போது பாடசாலை வளாகத்தில் நிழல் தரும் மரக்கன்றும் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வில், அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர், வை.அஹமட் வித்தியாலய அதிபர் யூ.எல்.எம்.ஹரீஸ், ஹைராத் வித்தியாலய அதிபர் யூ.எல்.அஹமட் லெப்பை மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ்.ஐ.எம்.பஸீல், உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Media Unit, – Batticaloa
ஊடகப்பிரிவு- மட்டக்களப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.