மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தை ஆளும் மகா விகாஸ் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்ற வேண்டும் என்று கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 39 பேர் போர்க்கொடி உயர்த்தினர்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு தலைமை தாங்கிய ஏக்நாத் ஷிண்டே எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்திக்கு அழைத்துச் சென்று தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கோரிக்கை குறித்து தன்னை நேரில் சந்தித்து தெரிவித்தால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்திருந்தார்.

வேண்டுமானால் உத்தவ் தாக்கரே இங்கு வந்து தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் விடுமுறையை அனுபவிக்கலாம் என்று அசாம் மாநில முதல்வர் செய்தியாளர்களிடம் கேலி பேசினார்.

இந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் எந்த முடிவும் எட்டப்படவில்லை தவிர எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவருக்கும் ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வரும் பா.ஜ.க. தலைவருமான தேவேந்திர பாட்னாவிஸ் சட்டசபையை கூட்டவேண்டும் என்று முறையிட்டார்.

சட்டசபையை கூட்டுவதற்கு ஆளுநர் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று சிவசேனா வழக்கு தொடுத்தது, இன்று மாலை நடைபெற்ற இந்த விசாரணையில், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.