மண்பிட்டி பாரம்பரிய மீன்பிடி இறங்கு துறைக்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம்

பள்ளிக்குடா, மண்பிட்டி பாரம்பரிய மீன்பிடி இறங்கு துறைக்கு இன்று (29) விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ பிரதேச கடற்றொழிலாளர்களினால் உருவாக்கப்பட்ட ‘தேவா கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

இதன்போது பிரதேச கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறிந்து கலந்துரையாடலிலும் அமைச்சர் ஈடுபட்டார்.

தற்போது நாடு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில்இ கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகளை வினைத்திறனாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தினையும் கடற்றொழில் அமைச்சர் இதன் போது அவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.