முதல்வர் பதவியிலிருந்து விலகினார் உத்தவ்:| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை: மஹாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் உத்தவ் தாக்கரே.

மஹாராஷ்டிராவில் நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம் என இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானதையடுத்து, சமூக வலைதளம் வாயிலாக உத்தவ் தாக்கரே கூறியது, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன். கடந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சி எனக்கு திருப்திகரமாக இருந்தது. பால்தாக்ரேயின் கனவுகளை நிறைவேற்றியிருக்கிறேன்.

latest tamil news

எனக்கு ஆதரவு அளித்து வந்த காங்.தலைவர் சோனியா, தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு நன்றி. இத்துடன் எனது முதல்வர் பதவி மற்றும் சட்டமேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், மும்பை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கிறேன். இவ்வாறு உத்தவ் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.