வெளியானது குரூப்-1 தேர்வு முடிவு.. உள்ளே இருக்கு முழு விவரம்..!

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதன்மை தேர்வுக்கான முடிவுகள் தற்போது டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை குரூப் 1 முதன்மை தேர்வுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வு பதிவெண்கள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://www.tnpsc.gov.in/english/latest_results.aspx  வெளியாகியுள்ளது.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் வரும் ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

இதுகுறித்து மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தகவல்கள் அனுப்பப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.