தமிழகத்தில் 2 மாவட்டங்களில் மேலும் அதிகரித்த கொரோனா பாதிப்பு.!!

இந்தியாவில் மூன்றாவது அலையை மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்த கட்டுப்பாடுகளின் எதிரொலியாக கட்டுக்குள் வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். 

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது.குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், தமிழகத்தில் நேற்று புதிதாக 1,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், நேற்று உயிரிழப்பு இல்லை.  கொரோனாவுக்கு 10,033 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

குறிப்பதாக சென்னைமற்றும் செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 771 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 4,300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டில் 316 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 1,738 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.