“அவர்கள் என்னை ஏமாற்றியதைத் தவிர வேறொன்றும் இல்லை" – திருமணம் குறித்து சுஷ்மிதா சென்

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென் இதுவரை திருமணமே செய்து கொள்ளவில்லை. அவர் 2000 மற்றும் 2010-ம் ஆண்டில் இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தன் காதலர் ரோஹ்மன் என்பவரைப் பிரிவதாக கடந்த ஆண்டு தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். “நண்பர்களாகத் தொடங்கினோம், நண்பர்களாக இருப்போம்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நடிகை டிவிங்கிள் கண்ணா நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சுஷ்மிதா சென் மனம் விட்டுப்பேசினார். தான் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறித்தும் பேசினார். “வாழ்க்கையில் அதிர்ஷ்டவசமாக சில சுவாரஸ்யமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன்.

சுஷ்மிதா சென்

நான் திருமணம் செய்யாமல் போனதற்கு ஒரே காரணம் அவர்கள் என்னை ஏமாற்றியதைத் தவிர வேறொன்றும் இல்லை. இதில் எனது குழந்தைகளுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்கள் ஒருபோதும் பாரபட்சமாக நடந்துகொண்டதில்லை. அவர்கள் எப்போதும் அன்புடனே நடந்துகொண்டுள்ளனர். எனது வாழ்க்கையில் இருந்த மனிதர்களை அவர்கள் திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு சமமான அன்பு மற்றும் மரியாதை கொடுத்துள்ளனர். அதனைப் பார்க்கும்போது மிகவும் அழகாக இருக்கும். எனது வாழ்க்கையில் மூன்று முறை திருமணம் செய்யக்கூடிய சூழ்நிலை வந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் கடவுள் என்னைக் காப்பாற்றினார். அவர்களுடன் என்னென்ன பிரச்னைகள் வந்தது என்பதையெல்லாம் சொல்ல முடியாது. கடவுள் என்னையும் என் குழந்தைகளையும் காப்பாற்றுகிறார். அவர் என்னை இந்தக் குழப்பமான திருமண பந்தத்தில் அனுமதிக்கமாட்டார்” என்று தெரிவித்தார். சுஷ்மிதா சென் மூத்த மகள் ரெனி குறும்படத்தில் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.