காணமல் போன ஆண் சடலமாக மீட்பு.. கள்ளகுறிச்சி அருகே பரபரப்பு..!

காணாமல் போன மளிகை கடை வியாபாரி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளகுறிச்சி மாவட்டம், செம்மணாங்கூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவருக்கு திருமணமாகி  வசந்தகுமாரி என்ற மனைவியும் மகளும் உள்ளனர். வசந்தகுமாரி ஒராண்டுகளுக்கு முன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.அப்போது அங்கிருந்த ஒருவருடம் பழக்கம் ஏற்பட்டது.

நேற்று முன் தினத்திலிருந்து சந்தோஷை காணவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். அவரை தேடி வந்த நிலையில், அவரின் சடலம் கெடிலம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. அந்த சடலத்தை மீட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த ஒரு மாதமாக வசந்தகுமாரியின் ஆண் நண்பர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அவரின் செல்போன் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அவர் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.