கும்பகோணம்: பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள ரவுடி புண்ணியமூர்த்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை கொரநாட்டு கருப்பூர் புறவழிச்சாலையில் மர்மநபர்களால் புண்ணியமூர்த்தி கொலை செய்யப்பட்டுள்ளார். புண்ணியமூர்த்தி கொலை வழக்கில் ஜீவானந்தம், பிரகாஷ், தமிழ்வாணன், கொற்கை ஆகியோரை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது.
