கும்பகோணத்தில், சாமி சிலைகளை விற்க முயன்ற இருவர் கைது.. 4 கிலோ சரஸ்வதி சிலை, 2 கிலோ லட்சுமி சிலை பறிமுதல்..!

கும்பகோணத்தில் புராதன சாமி சிலைகளை விற்க முயற்சித்த இருவரை, சிலைகளை வாங்க வந்தவர்கள் போல் நாடகமாடி போலீசார் மடக்கி பிடித்தனர்.

ரஞ்சித், உதயகுமார் ஆகிய இருவரும் சரஸ்வதி மற்றும் லட்சுமி உலோக சிலைகளை விற்க முயற்சிப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

சிலைகளை 2 கோடி ரூபாய்க்கு வாங்குவது போல் அலைபேசியில் பேசி இருவரையும் வரவழைத்த போலீசார் அவர்களை கைது செய்து சிலைகளை மீட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.