கொரோனா இன்னும் முடியல; 110 நாடுகளில் பாதிப்பு உயர்வு – எச்சரிக்கும் WHO

கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், 110 நாடுகளில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்து உள்ளார்.

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்த வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருவது சுகாதாரத் துறையினரை அச்சமடையச் செய்துள்ளது.

இதற்கிடையே, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில், கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது:

இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு – 4 ஆண்டுகளில் 5வது தேர்தல்!

கொரோனா பெருந்தொற்று பாதிப்பு மாறிக் கொண்டே இருந்தாலும் இன்னும் ஓயவில்லை. புதிதாக உருமாறும் தொற்றுகளை விரைவாக ஆய்வு செய்வது சற்று கடினமாக உள்ளது. எனவே, பெருந்தொற்று ஓய்ந்து விட்டது என நாம் இருந்து விடக் கூடாது.

A.4 மற்றும் BA.5 வகை கோவிட் தொற்றுகளால், சுமார் 110 நாடுகளில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக உலகளவில் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல் உயிரிழப்புகளும் மொத்தம் உள்ள ஆறு கண்டங்களில் மூன்று கண்டங்களில் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.