ரஷ்யா ஏவுகணை தாக்குதல் உக்ரைனில் 18 பேர் பலி| Dinamalar

கீவ்:ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், உக்ரைனில் அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில், இரண்டு சிறுவர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யா – உக்ரைன் போர் நான்கு மாதங்களை கடந்துள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தைக் கைப்பற்ற, ரஷ்யா தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் ஒடேசா அருகே செர்ஹிவிக்கா பகுதியில் ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா நடத்தியது. இதில், அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்து, இரண்டு சிறுவர்கள் உட்பட 18 பேர் பலியாகினர்; 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாம்புத் தீவில் இருந்து ரஷ்ய படைகள் வாபஸ் பெற்றன. நல்லெண்ண அடிப்படையில் படைகளை திரும்பப் பெறுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஆனால், தன் எதிர்ப்பு காரணமாகவே ரஷ்யா பின்வாங்கியதாக உக்ரைன் கூறியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.