73. வயது மூதாட்டி சாகசம்| Dinamalar

புதுடில்லி :உத்தரகண்ட் கங்கை நதியில் 40 அடி உயர பாலத்தில் இருந்து மூதாட்டி ‘டைவ்’ அடிக்கும் ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஹரியானாவின் பந்தேபூர் கிராமத்தில் வசிக்கும் ஓம்வதி,73. சமீபத்தில் உத்தரகண்டின் ஹரித்துவாருக்கு குடும்பத்தினருடன் வந்தார்.
கங்கை நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதைப் பார்த்ததும் உற்சாகம் அடைந்தார். ஆற்றின் குறுக்கே 40 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு பாலத்தில் இருந்து நதியில் ‘டைவ்’ அடித்து நீந்தி கரை சேர்ந்தார்.
இக்காட்சியை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். வேகமாக பரவி வரும் இந்த வீடியோவைப் பார்த்த ஏராளமானோர் ஓம்வதிக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஓம்வதி கூறுகையில், “நான் சிறு வயதிலேயே நீச்சல் கற்றுக் கொண்டேன். கங்கையில் பல முறை நீந்தியிருக்கிறேன். சிறு வயதில் இருந்தே நீச்சல் அடிப்பதால்தான் இந்த வயதிலும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன்,” என்றார்.
இதேபோல், ஓம்வதி உற்சாகமாக டான்ஸ் ஆடும் வீடியோவும் சமூக வலைதளத்தில் ஏராளமானோரால் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.