இன்னும் சற்று நேரத்தில்… பாமக தலைவர் அன்புமணி இராமதாஸிடம் ஆதரவு கேட்கிறார் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு.!

சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உள்ளிட்ட பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை புரிந்துள்ளனர். 

பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக இன்று சென்னை வந்துள்ளார்.

தனியார் ஓட்டல் ஒன்றில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எம்பிகள், எம்எல்ஏக்களை சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டுகிறார். 

இந்த சிறப்பு கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவருமே கலந்து கொண்டுள்ளனர். தற்போது தனித்தனி அறையில் தங்கியுள்ள ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒரே மேடையில் அமர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிது.

சென்னை தாஜ் ஹோட்டலில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உள்ளிட்ட பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளனர். 

இன்னும் சற்று நேரத்தில்… பாமக தலைவர் அன்புமணி இராமதாஸிடம், தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு ஆதரவு கேட்க உள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.