ஈரானில் நிலநடுக்கம் – 5 பேர் உயிரிழப்பு

ஈரானில் இன்று (02) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

19 பேர் பலத்த காயமடைந்தனர்.

ஈரானில் தென்மேற்கில் பந்தர் அப்பாஸ் பகுதியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் 6ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னர் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.