கமிஷ்னர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பரபரப்பு..!

கமிஷனர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சித்தாலபாக்கத்தைச் சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜ். இவர் மீது பல வழக்குகள் உள்ளன. தற்போது அவர் திருந்தி வாழ்வதற்காக அறிவித்து அவர் மனைவியுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். அப்போது அவர் திடீரென அவர் கையில்வைத்திருந்த பிளேடால் கிழித்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

பாதுகாப்பு படையில் இருந்த காவலர்கள் அவரை தடுக்க முயன்றனர். கஞ்சா போதையில் இருந்த அவரை  சமாதானப்படுத்த முயன்றனர். அங்கிருந்த காவலர் ஒருவர் அவரை மடக்கிபிடித்து கையில் வைத்திருந்த பிளேடையும், கத்தியையும் பிடுங்கினார்.

அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அன்ங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படு வருகிறது. அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.