சிட்கோ நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாலையில் தீவிபத்து.!

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் அங்கு பணியில் இருந்த ஊழியர் ஒருவர் உடல் முழுவதும் தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பெயிண்ட் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் விற்கப்படும் அந்நிறுவனத்தில் பெயிண்ட் கலவைக்கு பயன்படுத்தும் கெமிக்கல் பேரல்கள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் எரிவாயு சிலிண்டர் ஒன்றும் வெடித்துள்ளது.

தீ மளமளவென கட்டிடம் முழுக்க பரவி கரும்புகை சூழ்ந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.