'வேலையின்றி மன உளைச்சல்' – 24 வது மாடியில் இருந்து கீழே குதித்து பெண் தற்கொலை

வேலையில்லாமல் வீட்டில் இருந்த பெண் 24-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் அடுத்த ஏகாட்டூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அல்போன்ஸா என்பவரின் மகள் ஜெனிபர் (35). இவர், பல்லாவரத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் வேலையை விட்டு நின்று விட்டதாக கூறப்படுகிறது.
image
இதனால் வேலை இல்லாமல் மன உளைச்சலில் இருந்த ஜெனிபர் 24-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கேளம்பாக்கம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.