Tamil News Live Update: இந்தியாவில் 17 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு!

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

இ.பி.எஸ் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

பொதுக்குழு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட்டு இருப்பது சட்டத்திற்கும், இயல்பறிவுக்கும் எதிரானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. இரு நீதிபதிகளின் உத்தரவு, அதிமுக கட்சி விதிகளில் இல்லாத ‘வீட்டோ’ அதிகாரத்தை பன்னீர் செல்வத்திற்கு அளித்துள்ளது.

தனது ஒப்புதல் இல்லாமல் தலைமை குறித்த விவாதத்தை நடத்த முடியாது என ஓபிஎஸ் தெரிவிப்பது தவறானது. இந்த மேல்முறையீடு மனு விசாரித்து தீர்ப்பு வரும் வரை சண்முகம் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Tamil News Latest Updates

மாநில அணை பாதுகாப்பு அமைப்பு!

தமிழகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்க, மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ’மாநில அணை பாதுகாப்பு’ அமைப்பை தமிழக அரசு உருவாக்கியது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மண்டலங்களின் தலைமைப் பொறியாளர்கள் உட்பட 15 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அணையின் பாதுகாப்பு, நீர் வருகை, நீர் வெளியேற்றம் உள்ளிட்டவைகளை இந்த அமைப்பு கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து – இந்தியா கடைசி டெஸ்ட் போட்டி!

இங்கிலாந்து – இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் உள்ள பர்மிங்கம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை:1) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.  

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்கள் சேர்த்துள்ளது. ஜடேஜா 83 ரன்னிலும், முகமது ஷமி ரன் எதுவும் எடுக்காமலும் (0) களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் அந்த அணியின் ஆண்டர்சன் அதிகபட்சமாக 3 விக்கெட்டும் பாட்ஸ் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
10:02 (IST) 2 Jul 2022
இந்தியாவில் 17 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 17,092 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்தனர். 14,684 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். மேலும் 1.09 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

10:02 (IST) 2 Jul 2022
ஆசிரியர் நியமனம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பள்ளி நிர்வாக குழு மூலம் ஆசிரியர் நியமனம் செய்வது விதிகளுக்கு முரணானது என கோரப்பட்ட வழக்கில், கல்வி பெறும் உரிமை சட்டத்தின் படி, தகுதியான ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

08:15 (IST) 2 Jul 2022
திரெளபதி முர்மு சென்னை வருகை!

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று சென்னை மற்றும் புதுச்சேரி வருகை தருகிறார். அங்கு, கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு கோருகிறார்

08:14 (IST) 2 Jul 2022
உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவிகள்!

உக்ரைனுக்கு மேலும் 82 கோடி டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.

08:14 (IST) 2 Jul 2022
புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!

13000 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியானது. உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை தொடர்ந்து புதிய அறிவிப்பை கல்வி ஆணையர் வெளியிட்டுள்ளார். அதன்படி பணியில் சேர விருப்பம் இருப்போர், ஜூலை 4 முதல் ஜூலை 6 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.