ஏரியில் மூழ்கி சிறுமிகள் பரிதாப பலி… கடலூர் அருகே நிகழ்ந்த சோகம்..!

ஏரியில் குளிக்க சென்ற சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபெருமாள் . இவருக்கு திருமணமாகி கன்னியாகுமரி  என்ற மனைவியும் 5 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், அவரின் மூத்தமகள்கள் இருவரும் பாட்டி ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், சம்பவதன்று உபாதை கழித்துவிட்டு குளிக்க செல்வதாக சொல்லி விட்டு சென்றனர். நீண்ட நேரமாகியும் அவ்வரக்ள் வராததால் அதிர்ச்சியடந்த உறவினர்கள் தேடினர். அப்போது ஏரியில் சிறுமிகள் இருவரும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.