தூங்கிக்கொண்டிருந்த 3 வயது சிறுமி மீது எதிர்பாராதவிதமாக ஏறிய டிராக்டர்… நிகழ்விடத்திலேயே பலியான சோகம்!

கோவை நெகமம் அடுத்த ஆண்டிபாளையத்தில் இயங்கிவரும் தனியார் தென்னை நார் தொழிற்சாலையில் தூங்கிக்கொண்டிருந்த 3 வயது சிறுமி மீது டிராக்டர் ஏறியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த உமேஷ் ரபத் என்ற தொழிலாளி, நேற்று மாலை தனது குழந்தை ஆராதனாவை தென்னை நார் உலரவைக்கும் களத்தின் ஒரு பகுதியில் சாக்கு விரித்து அதன் மீது தூங்க வைத்துள்ளார்.

காற்றடித்து சாக்குப்பை குழந்தையை மூடியிருந்ததை அறியாமல் மேற்குவங்கத்தை சேர்ந்த உத்தம் பத்ரா என்பவர் டிராக்டரை இயக்கியதில் அது குழந்தையின் தலைமீது ஏறியதாக கூறப்படுகிறது. உத்தம் பத்ரா மீது வழக்கு பதிவு செய்து நெகமம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.