’பெண்கள் இப்படி இருந்தால்தான்.. வேலைக்கு தேர்வு செய்யப்படுவர்’ : திமுக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

திண்டுக்கல்லில் நடைபெற்ற விழா ஒன்றில், திண்டுகல் எம்எல்ஏ காந்திராஜன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுகல், 12ம் வகுப்பு மாணவர்கள் எதிர்காலத்தில் என்ன படிக்கலாம் என்பது தொடர்பாக அரசு சார்பில் ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் எம்எல்ஏ காந்திராஜன் பெண்கள் அழகு தொடர்பாக பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் பேசியதாவது : ”இன்றைக்கு உள்ள பன்னாட்டு நிறுவனங்கள், கல்லூரிகளில் நீங்கள் எடுத்த மதிப்பெண்களை பார்ப்பதில்லை. மதிப்பெண்கள் முக்கியம் என்றாலும். அவர்கள் உங்களுக்கு இருக்கும் ஆங்கில அறிவித்திறனைத்தான் பார்க்கிறார்கள். நீங்கள் தெளிவாகவும், விரைவாகவும் ஆங்கிலத்தில் பேச வேண்டும். இதுதான் முக்கியம். ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும் என்பதைத்தான் இந்த நிறுவனங்கள் எதிர்பார்கின்றனர்.

ஆங்கிலத் திறன் இல்லாமல் நீங்கள் தலைகிழே நின்றாலும் எந்த பயனும் இல்லை. அதிக சம்பளம் வேண்டுமென்றால் நீங்கள் நன்றாக ஆங்கிலத்தில் பேச வேண்டும். பெண்களாக இருந்தால் அழகாக இருக்க வேண்டும் என்று நிறுவனங்கள் எதிர்பார்கின்றனர். இப்படியெல்லாம் இருக்கிறது. அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை கொடுத்ததற்காகத்தான் முதலமைச்சர் இந்தத் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்” என்று அவர் பேசினார்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.