75 வயது மாமியாரை கட்டையால் அடித்து கொலை செய்த மருமகள்.. மாமியார் உயிரிழந்த செய்தி கேட்ட மருமகள் தூக்கிட்டு தற்கொலை..!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மாமியாரை கட்டையால் அடித்த மருமகள் அவர் உயிரிழந்த செய்தி கேட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறால் தைலம்மாள் என்ற 75 வயது மூதாட்டியை அவரது மருமகள் செல்வி கட்டையால் சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.

ரத்த காயங்களுடன் முனகி கொண்டிருந்த தைலம்மாளை அவரது மகன் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் இருந்த செல்வி இதை கேள்விபட்டதும் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.