MS Dhoni: தோனிக்கு மூட்டு வலி சிகிச்சை… கட்டணமாக வெறும் 40 ரூபாய் கேட்ட டாக்டர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேட்பனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.

ராஞ்சியில் குடும்பத்துடன் வசித்துவரும் அவர், தற்போது மூட்டுவலி காரணமாக அவதியுற்று வருகிறார். கால்சியம் பற்றாக்குறை காரணமாகவே அவருக்கு மூட்டு வலி ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அண்மையில் தெரிவித்தனர்.

இதனையடுத்து, ராஞ்சி அருகே லபுங் எனும் வனப்பகுதியில் அமைந்துள்ள ஆயுர்வேத ஆசிரமத்துக்கு சில தினங்களுக்கு முன் சென்ற தோனி, அங்குள்ள மருத்துவரிடம் மூட்டு வலி சிகிச்சை பெற்றார். சிகிச்சை கட்டணமாக அந்த ஆயுர்வேத டாக்டர் தோனியிடம் வெறும் 40 ரூபாய் மட்டும் கேட்டுள்ளார். இந்த நிகழ்வு பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

“தோனியின் பெற்றோர் மூட்டு வலி சிகிச்சைக்கு என்னிடம் வருவது வழக்கம். அவர்களுக்கு மூட்டு வலி குறைந்ததை கண்டு. தோனியும் என்னை நாடி வந்தார். என்னிடம் அவர் சிகிச்சைக்கு வரும்போது அவர்தான் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி என்று எனக்கு தெரியாது.

மருத்துவ ஆலோசனைக்கு 20, ஆயுர்வேத மருந்துகளுக்கு 20 என மொத்தம் 40 ரூபாய் அவரிடம் கேட்டேன். உடனே சிரித்தபடி அவர் ஒரு தொகையை கொடுத்துவிட்டு சென்றார்.

அதன் பிறகு இங்குள்ளவர்கள் சொன்ன பிறகுதான் அவர் கிரிக்கெட் வீரர் தோனி என்று எனக்கு தெரியும்” என அப்பாவியாக கூறியுள்ளார் தோனிக்கு சிகிச்சை அளித்த ஆயுர்வேத மருத்துவர் வந்தன் சிங் கெர்வர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.