வனிதாவை குடும்பத்தில் சேர்த்து கொள்வீர்களா? சகோதரர் அருண்விஜய் சொன்ன ஒரு வார்த்தை


வனிதாவை சகோதரியாக ஏற்று கொள்வீர்களா என்ற நடிகர் அருண்விஜய்யிடம் செய்தியார்கள் கேள்வி எழுப்பினார்கள்.

தமிழ் சினிமாவின் சிறந்த நட்சத்திர ஜோடிகளில் ஒன்று தான் விஜயகுமார் – மஞ்சுளா தம்பதி.
விஜயகுமாரின் முதல் தாரத்தின் மகன் தான் அருண் விஜய். மஞ்சுளாவுக்கு விஜயகுமாருக்கும் பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மூவரும்.

இவர்களில் வனிதாவுக்கு தனது குடும்பத்தாருடன் தகராறு இருப்பதால் மொத்த குடும்பமும் அவரிடம் பேசுவதில்லை.
இந்த நிலையில் அருண் விஜய் தனது சகோதரியின் கணவர் ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் நடித்திருந்தார்.

வனிதாவை குடும்பத்தில் சேர்த்து கொள்வீர்களா? சகோதரர் அருண்விஜய் சொன்ன ஒரு வார்த்தை | News Reporter Questions About Vanitha To Arunvijay

இந்த படம் ஒரு குடும்ப பாசத்தை சொல்லும் கதையாகும். இந்த படம் வெளியான அன்று ரசிகர்களுடன் இயக்குநர் ஹரியும் அருண் விஜய்யும் படம் பார்த்தனர். இதையடுத்து அருண்விஜய்யிடம் செய்தியாளர் ஒருவர் குடும்பத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது, ஒற்றுமையா இருக்க வேண்டும் என படத்தில் சொல்லியுள்ளீர்கள்.

உங்கள் வீட்டிலேயே ஒருவர் தனியாக இருக்கிறார்
அவரை சேர்த்துக் கொள்ள போறீர்களா என  வனிதா குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அருண் விஜய் சிரித்துக் கொண்டே இருந்தார்.

உடனே பின்னால் இருந்த ஒருவர் அந்த செய்தியாளரிடம் இது படத்தை பற்றிய விஷயம் எனவே அது பற்றி மட்டும் கேளுங்கள் என சொன்னதற்கு அருண் விஜய்யும் “ம்ம்” என ஆமோதித்தார்.

பின்னர் எந்த பதிலையும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.  

வனிதாவை குடும்பத்தில் சேர்த்து கொள்வீர்களா? சகோதரர் அருண்விஜய் சொன்ன ஒரு வார்த்தை | News Reporter Questions About Vanitha To Arunvijay



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.