அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சிகாகோ: அமெரிக்காவில், சுதந்திர தின அணிவகுப்பின் போது, மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில், 6 பேர் பலியாயினர். 37 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்கா உருவானதன் 246வது ஆண்டுவிழா, அந்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, சிகாகோவில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியில், சுதந்திர தின அணிவகுப்பு நடத்தப்பட்டது. நிகழ்ச்சி துவங்கிய 10 நிமிடத்தில், மர்மநபர் ஒருவர், அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் துவங்கினார். இந்த சம்பவத்தில், 6 பேர் பலியாயினர்; 37 பேர் காயமடைந்தனர்.

latest tamil news

தாக்குதல் நடத்திய நபரின் பெயர் ராபர்ட் கிரமோ (வயது 22) எனவும், அருகேயிருந்த கட்டடம் ஒன்றின் மேல் நின்றவாறு அவர் சுட்டதாகவும், போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.