ஆசீர்வாதம் வாங்குவது போல வந்த மர்ம நபர்கள்; பிரபல வாஸ்து நிபுணர் பட்டப்பகலில் குத்திக் கொலை!

கர்நாடக மாநிலம், ஹுப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் வாஸ்து புகழ் சந்திரசேகர் குருஜி இன்று காலை மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹோட்டல் ஒன்றின் வரவேற்பறை நாற்காலியில் சந்திரசேகர் குருஜி அமர்ந்து கொண்டிருக்கிறார். பக்தர்கள் என்ற பெயரில் இருவர் அவரை நெருங்குகின்றனர். ஒரு நபர் அவருடைய காலைத் தொட்டு ஆசீர்வாதம் பெறுகிறார். அப்போது அவருடன் இருந்த மற்றொரு நபர் வெள்ளைத் துணியில் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென அவரை குத்துகிறார். அதன் பிறகு, அந்த மர்ம நபர்கள் இருவரும் சந்திரசேகர் குருஜியை கத்தியால் பலமுறை குத்திக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தனர்.

கொலை

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வரவேற்பாளர் பெண் அலறியபடி அங்கிருந்து தப்பியோடினார். மேலும், ஹோட்டலில் கூடியிருந்த சிலர் அந்த கொலையாளிகளைத் தடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த கொலையாளிகள் அவர்களையும் கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு, தப்பியோடிவிட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்து அந்த ஹோட்டலுக்கு விரைந்த போலீஸார், குருஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ்

ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரித்த போலீஸார், தற்போது இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக இருவரைக் கைதுசெய்திருக்கின்றனர்.

பிரபல வாஸ்து நிபுணர் பட்டப்பகலில் குத்திக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.