பரீட்சை நடைபெறும் திகதி: கல்வி அமைச்சர் அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

அத்துடன் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் பெப்ரவரி – மார்ச் மாதங்களில் இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சர், பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

கடந்த வருட உயர்தரப் பரீட்சை கூட தாமதமாகிவிட்டதாகவும், விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் மாதம் பரீட்சை பெறுபேறு வெளியிடப்படும் எனவும் , இந்த ஆண்டுக்கான பரீட்சைia நவம்பரில் நடத்த உள்ளோம் எனவும் கூறினார்.

பரீட்சையை நடத்துவதற்கு பல நடைமுறைகள் உள்ளது என்பதனால் சுமார் மூன்று மாதங்கள் தேவைப்படுவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

பரீட்சைகளை திட்டப்படி நடத்துவதற்கு முன்னர் பாடத்திட்டங்களை சரியான முறையில் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.