பாகிஸ்தானிலும் கொட்டுது மழை7 குழந்தைகள் உட்பட 25 பேர் பலி| Dinamalar

கராச்சி:நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, ஏழு குழந்தைகள் உட்பட, 25 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குவெட்டா மாவட்டத்தில், 300 குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இங்கு ஒரு வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பெண்கள், குவெட்டா புறநகரில் ஒரு வீடு இடிந்து மூன்று பெண்கள், நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர்.

மண்டி என்ற இடத்தில் குளத்தில் இருந்து இரு சிறுமியர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மஸ்துங் மாவட்டம் தாஷ்ட் என்ற இடத்தில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து இரு பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.பாகிஸ்தான் – -ஈரான் எல்லை அருகே மாண்ட் என்ற கிராமத்தில் மூன்று குழந்தைகளும், நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் ஐந்து பேரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.