மத்திய அரசுடன் பிரான்ஸ் நிறுவனம் ஒப்பந்தம்| Dinamalar

புதுடில்லி : ஐரோப்பிய நாடான பிரான்சின் சப்ரான் நிறுவனம் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான ஏச்.ஏ.எல். உடன் இணைந்து கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஹெலிகாப்டர் பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது.

இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையேயான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.மேலும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் சப்ரான் நிறுவனம் சார்பில் அதிநவீன விமானங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று சந்தித்துப் பேசிய சப்ரான் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆலிவர் இதை அறிவித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.