மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை..!

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக டோலா 650 மாத்திரைகளை தயாரிக்கும் மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பெங்களூருவில் மைக்ரோ லேப்ஸ் தலைமை அலுவலகம் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் திலீப் சுரானா மற்றும் இயக்குனர் ஆனந்த் சுரானா ஆகியோரின் அலுவலகம் மற்றும் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது.

2020ம் ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது 350 கோடி டோலா மாத்திரைகள் விற்பனை மூலம் மைக்ரோ லேப்ஸ் நிறுவன 400 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக கூறப்படுகின்றது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.